மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 50 வயதுடையவர், 2வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து திருப்பூர் ஊத்துக்குளி ரோடு 2ம் ரயில்வே கேட் பகுதியில் தங்கி லாரி டிரைவராக வேலை செய்து வந்தார்.
2வதாக திருமணம் செய்த பெண்ணுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், லாரி டிரைவரின் மனைவி மற்றும் மூத்த மகள் சொந்த ஊருக்கு சென்ற நிலையில் இளைய மகளான 15 வயது சிறுமி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது லாரி டிரைவர், தனது மகளான 15 வயது சிறுமியிடம் அத்துமீறி உள்ளார்.
இந்நிலையில், சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே சிறுமியின் தாய், அரசு மருத்துவமனைக்கு மகளை அழைத்து சென்று பரிசோதனை செய்துள்ளார். அப்போது சிறுமி 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் தாய் அதிர்ச்சியடைந்தார். உடனே வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை பிடித்து விசாரித்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

More Stories
வீட்டில் பீரோவை உடைக்காமலேயே 21 சவரன் தங்கம்.. 2 ஏக்கர் நிலப்பத்திரம் திருட்டு …
அரசு பஸ் பழுதால் அடர்ந்த வனப்பகுதியில் இறக்கி விடப்பட்ட பயணிகள்: 3 கி.மீ. தூரம் பீதியுடன் நடந்துசென்ற அவலம்…
பெண் விவகாரத்தால் கார் டிரைவர் கொலை?