திருப்பத்தூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவரின் 14 வயது மகள், ல் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அதேபகுதியில் உள்ள சாலையில் சிறுமி நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த மாடப்பள்ளியை சேர்ந்த லட்சுமணன்(25) என்பவர், சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
சிறுமி கூச்சலிடவே ஆத்திரமடைந்த லட்சுமணன், சிறுமியின் கையை பிடித்து இழுத்து கடித்து குதறிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டாராம். காயமடைந்த சிறுமியை பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.புகாரின்படி திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்குப்பதிந்து லட்சுமணனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

More Stories
டாஸ்மாக் கடைகளில் 54 புதிய பிராண்ட் மது வகைகளை விரைவில் அறிமுகப்படுத்த முடிவு
மரணத்திலும் இணைபிரியாத தம்பதி: மனைவி இறந்த 3 மணி நேரத்தில் கணவர் உயிர் பிரிந்தது!
நாகர்கோவில் சிறையில் கைதி அடித்துக் கொலை: சிறை வார்டர்கள் சஸ்பெண்ட்; 8 பேர் அதிரடி கைது!