பரபரப்பு…நடிகர் ரஜினிகாந்துடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு!

நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென சென்றுள்ளார். அவருடன் அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தும் சென்றுள்ளார். அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த கருத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்திருந்தார். ஆனால், செங்கோட்டையனின் பதவியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பறித்தார். ஏற்கெனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓ.பன்னீர்செல்வம் திரிசங்கு சொர்க்கத்தில் உள்ளார்.

இந்த நிலையில், திடீரென ரஜினிகாந்தை அவரது மகனுடன் ரகசியமாக எதற்கு சந்தித்து பேசினார் என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. ஆனால், மரியாதை நிமித்தமாக ரஜினியைச் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்ததாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான புகைப்படங்களை ஓ.பி.ரவீந்திரநாத் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில்” இன்று உலகமெங்கும் உள்ள மக்களின் இதயத்தில் நீங்கா இடம் பெற்ற தமிழ்த் திரையுலகின் பெருமைமிகு நாயகன், பத்மவிபூஷண், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்தை தமிழக முன்னாள் முதலமைச்சரும், கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் உடன் இணைந்து, மரியாதை நிமித்தமாக அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து, எனது தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு, ஆசி பெற்றேன்” என பதிவிட்டுள்ளார்.

  • Related Posts

    திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

    திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

    போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *