தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் லாரி டிரைவர்களிடம் ஹைவே ரோந்து போலீசார் கட்டாய பணம் வசூலில் ஈடுபட்டனர். இந்த பணம் வசூலிப்பு சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து சேலம் சரக டிஐஜி சந்தோஷ் ஹடிமணி, தர்மபுரி எஸ்பி அலுவலகத்தில் நேரடியாக வந்து விசாரணை நடத்தினார்.
பின்னர் பணம் வசூலித்த போலீசாரை சஸ்பெண்ட் செய்ய, எஸ்பி மகேஸ்வரனுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, முதற்கட்ட விசாரணையின்படி எஸ்எஸ்ஐ செல்வபதி, ஏட்டுகளான வெங்கடேசன், பரதன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. மகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.

More Stories
தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் புறப்படுகிறார் முதல்வர் விஜய்: பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டுப் பயணம்!
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்