சென்னை விமான நிலையத்தில் பல்வேறு வசதிகளுடன் கூடிய பயணிகள் ஓய்வு அறை மற்றும் பிக்கப் பாயிண்ட் கட்டுமானப் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதால் பயணிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வெளி நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகள் குடியுரிமை சோதனை பிரிவில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து அதன் பின்பு உடைமைகளை கன்வேயர் பெல்டில் இருந்து எடுத்துக்கொண்டு வெளியில் வருவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிடுகிறது.
அதன் பின்பு டிக்கெட் பாயிண்டிற்கு, பல நிலை(Multi level) கார் பார்க்கிங்க்கு செல்வதற்கு பேட்டரி வாகனங்களுக்கு நீண்ட நேரம் வரிசையில் நிற்கின்றனர். இதனால் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு விமானங்களில் வரும் பயணிகள் விமான நிலையத்தில் பல இடங்களில் வரிசையில் காத்திருந்து வீடுகளுக்கு செல்வதற்கு சுமார் 3 மணி நேரம் வரை தாமதம் ஏற்படுகிறது.
இந்த நிலையில் இந்திய விமான நிலைய ஆணையம் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வருகை பகுதியில் பயணிகள் ஓய்வு எடுக்கும் பகுதி கட்டுமானப் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடித்து பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர இந்திய விமான நிலைய ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

More Stories
“தமிழக அரசியல் பண்பாட்டை மீட்கும் முதல்வர் ஜோசப் விஜய்…” – மு.வீரபாண்டியன் பாராட்டு
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடன் முதல்வர் ஜோசப் விஜய் சந்திப்பு…
25 நாட்கள் வேலை வழங்கும் ‘விபி ஜி ராம் ஜி’ திட்டம் ஜூலை 1 முதல் அமல்…