தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள் உள்பட 57 ரயில்கள் தற்காலிகமாக மேல்மருவத்தூரில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பிரபலமான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இந்த நிலையில், இருமுடி மற்றும் தைப்பூசம் நிகழ்வையொட்டி அந்த வழியாகச் செல்லும் ரயில்கள் மேல்மருவத்தூரில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ” டிசம்பர் 15-ம் தேதி முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை பக்தர்களின் வசதிக்காக மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் 57 ரயில்களின் விவரங்களை ரயில்வே வெளியிட்டுள்ளது. லோகமான்ய திலக்- காரைக்குடி எக்ஸ்பிரஸ், சென்னை- மதுரை இடையே செல்லும் வைகை மற்றும் பாண்டியன் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி- ஹஸ்ரத் இடையே செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ், சென்னை- செங்கோட்டை இடையே செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ், சென்னை – திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ், சென்னை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், சென்னை- கொல்லம் எக்ஸ்பிரஸ், தாம்பரம்- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், சென்னை- மன்னார்குடி எக்ஸ்பிரஸ், சென்னை- தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ், தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில்கள் மேல்மருத்துவதூரில் ஒரு நிமிடம் நின்று செல்லும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.