“புதுயுகம்” தொலைக்காட்சி, இளைஞர்களுக்கான மாபெரும் “பேச்சுப் போட்டியை தமிழகம் முழுவதும் நடத்துக்கிறது”.

 

தலைப்பு :-

“தமிழோடு உறவாடு..” (இளையோருக்கான பேச்சுப் போட்டி)


விதிமுறைகள் :-

  1. போட்டியாளர் நவம்பர்-1,2025 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவோ, 25 வயதுக்கு மிகாதவராகவோ இருக்க வேண்டும். (வயது 18-25)
  2. கீழ்க்காணும் தலைப்புகளில் ஒன்றைத் தேர்வு செய்து உங்கள் உரையை காணொளியாகப் பதிவு செய்து 9944014707 இந்த வாட்ஸப் எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.
  3. காணொளியில், உங்கள் பெயர், தாய், தந்தை பெயர், ஊர், வயதைக் குறிப்பிடவும்.
  4. குறைந்தது 2 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 3 நிமிடங்கள் வரை பேசலாம்.
  5. காணொளிப் பதிவை, அலைபேசியை கிடைமட்டமாக வைத்து [Horizontal] மிகத் தெளிவாக, இரைச்சல் இல்லாமல் பதிவு செய்ய வேண்டும்.
  6. எடிட்டிங் செய்யாமல், பதிவு செய்ததை அப்படியே அனுப்ப வேண்டும்
  7. உங்கள் உரை, இதற்கு முன் எந்த வடிவத்திலும் எதிலும் வெளிவந்ததாக இருக்கக்கூடாது.
  8. காணொளியை, இந்த மாதம் 26ஆம் தேதி (26.10.2025) வரை அனுப்பலாம்.
  9. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

தலைப்புகள்:

ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து, தலைப்பைக் குறிப்பிட்டுப் பேசவும்.

1. எவ்வாறெல்லாம் சமூக ஊடகங்கள் என்னை வளைக்கிறது?

2. நான் திரைப்பட இயக்குநரானால்…

3. அலைபேசி இல்லாத ஒரு நாளில் நான்…

வெற்றிபெற்றவர்களுக்கு வழங்கப்படும் மொத்த பரிசுத் தொகை :- 1,00,000/ (1 லட்சம்)

நடுவர்கள் :-

  1. செல்வேந்திரன்               (எழுத்தாளர்/ பேச்சாளர்)
  2. ஞானசம்பந்தம்
    (நடிகர்/ பட்டிமன்ற நடுவர்)
  3. முத்துக்குமரன் (பேச்சாளர், பிக்பாஸ் வின்னர்)