தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு அடுத்த வாரம் சனிக்கிழமை தீர்ப்பு வெளியாகிறது.
கோவை விமான நிலையம் அருகே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2ஆம் தேதி ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்த கல்லூரி மாணவி அங்கு வந்த மூன்று பேரால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். 3 பேரும் ஆயுதங்களை காட்டி மிரட்டி அவர்களை தாக்கிவிட்டு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இது தொடர்பாக கோவை பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர் இதையடுத்து, கோவை அச்சம்பத்தில் தொடர்புடைய சதீஷ், அவரது சகோதரர் காளீஸ்வரன் மற்றும் தவசி ஆகிய 3 பேரை துடியலூர் அருகே சுட்டுப்பிடித்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் நடந்து வரும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி அவரது ஆண் நண்பர், உறவினர்கள் விசாரணை அதிகாரிகள் என 113 சாட்சியங்களிடம் விசாரணை நடைபெற்று முடிந்துள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது இறுதி கட்ட வாதமும் இரு தரப்பிடம் முடிந்து உள்ள நிலையில் கைதான சதீஷ், காளீஸ்வரன், தவசி ஆகிய 3 பேரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களது வாதமும் கேட்டறியப்பட்டத்தை தொடர்ந்து, கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வரும் மார்ச் 7ஆம், அதாவது அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.






