மருத்துவமனை 3வது மாடியில் பயங்கர தீ- செவிலியர்கள் செய்த காரியம்!

மத்தியப்பிரேதேசத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 9 நோயாளிகளை செவிலியர்கள் காப்பாற்றியுள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம்  டாமோவில் மாவட்ட மருத்துவமனை உள்ளது. இங்குள்ள மூன்றாவது மாடியில் பொது வார்டு உள்ளது. நேற்று மாலை திடீரென இந்த வார்டில் இருந்து புகை வந்துள்ளது. அப்போது மின்சார வயரில் தீப்பிடித்து வார்டு முழுவதும் பற்றிக் கொண்டது. இதனால் நோயாளிகள் உயிர் பயத்தில் அலறினர். அங்கிருந்த செவிலியர்கள் தீயணைப்பு கருவி மூலம் தீயை அணைத்ததுடன், 9 நோயாளிகளை அங்கிருந்து பாதுகாப்பாக வேறு வார்டுக்கு கொண்டு சென்றனர்.

ஒரு நோயளியின் உறவினர் செல்போனுக்கு சார்ஜ் போட்ட போது ஷார்ட் சக்யூட் ஏற்பட்டதால் இந்த தீ விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. நர்சிங் ஊழியர்களிடமிருந்து தகவல் கிடைத்தவுடன் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுகாதார அதிகாரி முகேஷ் ஜெயின் தெரிவித்தார். தீயை அணைத்தபிறகு அனைத்து நோயாளிகளும் மீண்டும் வார்டுக்கு மாற்றப்பட்டனர். இந்த சம்பவத்தால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. உடனடியாக பழுதடைந்த மின்சாரப் பலகை புதிதாக மாற்றப்பட்டுள்ளதாக முகேஷ் தெரிவித்தார். தங்கள் உயிர்களைக் காப்பாற்றிய செவிலியர்களுக்கு நோயாளிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Posts

ஆக.19-ம் தேதி தான் கெடு- தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பிஹார் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை தேர்தல் ஆணையம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆக.19-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிஹாரில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல்…

சர்ச்சை…. ஆர்எஸ்எஸ் தலைவர் பெயரில் 2 வாக்காளர் அடையாள அட்டை

திருச்சூரில் ஆர்எஸ்எஸ் தலைவர் கே.ஆர்.ஷாஜி இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் தற்போது சர்ச்சையாகியுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவில், மோசடி நடைபெற்றதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பியுள்ளன. அதேபோல பிஹார் மாநில வாக்காளர் பட்டியல் திருத்தத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *