நடிகை மீரா மிதுன் மனநல மருத்துவமனையில் அனுமதி- போலீஸ் சொன்ன அதிர்ச்சி தகவல்!

டெல்லியில் மனநல மருத்துவமனையில் நடிகை மீரா மிதுன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்தவர் மீரா மிதுன்(34). நடிகையும், மாடல் அழகியுமான இவர் சில தமிழ் திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தார். பிக் பாஸ் தமிழ் சீசனிலும் பங்கேற்றார். இந்த நிலையில், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைதளத்தில் மீரா மிதுன் வீடியோ வெளியிட்டதாக கடந்த 2021-ம் ஆண்டு பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போலீஸில் புகார் அளித்தனர். இதனை விசாரித்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

இதன் பின் அவர்கள் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையின் போது மீரா மிதுன் தொடர்ந்து ஆஜராகாததால் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து மீராமிதுனை கைது செய்ய போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் டெல்லி விதிகளில் சுற்றித் திரிந்த மீரா மிதுனை போலீஸார் கண்டுபிடிக்கப்பட்டு அங்குள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார்..

இந்த நிலையில் அந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு அரசு வக்கீல் எம்.சுதாகர், மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில், ‘மீராமிதுன் டெல்லியில் உள்ள மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரை சென்னை அழைத்து வர முடியவில்லை. பயணம் செய்வதற்கு ஏற்ற வகையில் அவரது உடல்நலம் சீரானதும் சென்னை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறோம்’ என கூறப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, வழக்கின் விசாரணையை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Posts

28 ஆண்டுகளுக்குப் பின் ரீ – என்ட்ரி கொடுக்கும் டிஸ்கோ சாந்தி!

28 ஆண்டுகளுக்குப் பின் புல்லட் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடுத்த ரவுண்ட்டிற்கு டிஸ்கோ சாந்தி அடியெடுத்து வைத்துள்ளார். பழம்பெரும் நடிகர் ஆனந்ததின் மகளான டிஸ்கோ சாந்தி 1980 முதல் 1990-ம் ஆண்டு வரை தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்து…

இந்தியாவின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது- எச்சரிக்கும் நடிகர் பிரகாஷ்ராஜ்!

நம் நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது. நமது குரல் திருடப்பட்டுள்ளது என்று நடிகர் பிரகாஷ்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர் சந்திப்பை நேற்று நடத்தினார். அப்போது பெங்களூரு மத்திய மக்களவைத்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *