தனியாக பேச ராமதாஸ், அன்புமணி நேரில் வர வேண்டும் – நீதிபதி உத்தரவு

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்க்டேஷ் உத்தரவிட்டுள்ளார்.

பாமக பொதுக்குழுக் கூட்டத்தை மாமல்லபுரத்தில் நாளை பாமக தலைவர் அன்புமணி கூட்டியுள்ளார். இதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று  சென்னை உயர் நீதிமன்றத்தில் முரளி சங்கர் என்பவர் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்தத நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ஆகியோரிடம் தனியாக பேச வேண்டியுள்ளதால், இருவரையும் தன்னுடைய அறைக்கு நேரில் வர முடியுமா என இரு தரப்பு வழக்கறிஞரிடமும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதை பாமக தலைவர் அன்புமணி தரப்பு வழக்கறிஞர் ஏற்றுக் கொண்டார். ஆனால், டாக்டர் ராமதாஸ் தரப்பில் உறுதி அளிக்கப்படவில்லை. இதையடுத்து, மாலை 5:30 மணிக்கு தன் அறைக்கு வரும்படி ராமதாஸ், அன்புமணி இருவருக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பின்போது, கட்சியினர், ஆதரவாளர்கள், வழக்கறிஞர்களுக்கு அனுமதியில்லை எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

Related Posts

மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்- வானிலை மையம் எச்சரிக்கை

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை (ஆக.13) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால் மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடமேற்கு மற்றும் அதனை…

கல்லறை திருநாளில் ஆசிரியர்கள் எப்படி தேர்வுக்குச் செல்வார்கள்? – ஈபிஎஸ் கேள்வி

கல்லறை திருநாளில் அறிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு தேதிக்கு மாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *