விஜயகாந்த் படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது- பிரேமலதா எச்சரிக்கை

தனிப்பட்ட எந்த அரசியல் கட்சியும் விஜய்காந்த் படத்தைப் பயன்படுத்தக்கூடாது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக வேலூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. அத்துடன் போதைப்பொருள் பயன்பாடு அதிகமாக உள்ளது. சட்டம் ஒழுங்கை கையில் வைத்து இருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இதை சரியாக கையாண்டு சீர் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றுவதை தேமுதிக வரவேற்கிறது. விஜயகாந்த் படத்தை எக்காரணம் கொண்டும் எந்தக் கட்சியும் பயன்படுத்தக்கூடாது. கூட்டணிக்கு வரும் போது வேண்டுமானால் விஜயகாந்த் படத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். தனிப்பட்ட முறையில் எந்த அரசியல் கட்சியும் விஜயகாந்த் படத்தை பயன்படுத்தக் கூடாது. சினிமாவில் விஜயகாந்த் புகைப்படத்தை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று அவர் தெரிவித்தார்.

 

Related Posts

இடி, மின்னலுடன் 24 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு கடலோர ஆந்திரபிரதேச பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்னிந்திய பகுதிகளின்…

தமிழ்நாட்டில் பாமக தலைமையில் புதிய அணியா?- அன்புமணி பேச்சால் குழப்பம்

வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு மெகா கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வருவோம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் மாமல்லபுரத்தில்  பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பாமக தலைவராக அன்புமணி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *