விருதுக்காக ஒரு குறும்படம்- மதுரையில் பூஜையுடன் இனிதே தொடங்கியது!

விருதை இலக்காக வைத்து மதுரையில் குறும்பட பூஜை தொடக்கவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது.

மதுரை காந்தி மியூசியம் அருகில் உள்ள பார்க் முருகன் கோயிலில் ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா தலைமையில் குறும்பட பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் மீசை மனோகரன், அப்பா பாலாஜி, மீசை அழகப்பன், நடிகை மல்லிகா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த குறும்படம் எடுக்கும் வி 3 கிரியேஷன்ஸை தொடங்கி வைத்து அகஸ்தியர் ஹெர்பல் நாகலிங்கம் வாழ்த்து கூறினார்.

இந்த விழாவில் எழுத்தாளர் சுந்தரபாண்டி, தமிழ் திரைக்கலைஞர்கள் நலச்சங்க தலைவர் சுப்புராஜ், அறிமுக நடிகர் செளந்தரபாண்டி, நடிகர் வைத்தியலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், எழுத்தாளர் விவேக் ராஜ், எழுத்தாளர் விமல், கல்லூரி மாணவி லாவண்யா, நடிகை ரிஷிதா, குழந்தை நட்சத்திரம் லியானா மற்றும் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள், தேநீர் வழங்கப்பட்டது.

Related Posts

28 ஆண்டுகளுக்குப் பின் ரீ – என்ட்ரி கொடுக்கும் டிஸ்கோ சாந்தி!

28 ஆண்டுகளுக்குப் பின் புல்லட் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடுத்த ரவுண்ட்டிற்கு டிஸ்கோ சாந்தி அடியெடுத்து வைத்துள்ளார். பழம்பெரும் நடிகர் ஆனந்ததின் மகளான டிஸ்கோ சாந்தி 1980 முதல் 1990-ம் ஆண்டு வரை தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்து…

இந்தியாவின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது- எச்சரிக்கும் நடிகர் பிரகாஷ்ராஜ்!

நம் நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது. நமது குரல் திருடப்பட்டுள்ளது என்று நடிகர் பிரகாஷ்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர் சந்திப்பை நேற்று நடத்தினார். அப்போது பெங்களூரு மத்திய மக்களவைத்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *