அடுத்தடுத்து பரபரப்பு…. டாக்டர் ராமதாஸின் போன் ஹேக் செய்யப்பட்டதாக டிஎஸ்பி அலுவலகத்தில் புகார்

தைலாபுரம் இல்லத்தில் உள்ள தொலைபேசி,வைஃபை மற்றும் சிசிடிவி ஆகியவை ஹேக் செய்யப்பட்டுள்ளதாக டிஎஸ்பி அலுவலகத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் புகார் செய்துள்ளார்.

தமிழ் நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த நிலையில் பாமகவில் டாக்டர் ராமதாஸ்க்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸ்க்கும் இடையே உட்கட்சி பூசல் வெடித்தது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தைலாபுரம் இல்லத்தில் டாக்டர் ராமதாஸ் இருக்கையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஓட்டு கேட்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஒட்டு கேட்டும் கருவியை டாக்டர் அன்புமணி தான் வைத்தார் என்று ராமதாஸ் குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து அவர் விழுப்புரம் சைபர் கிரைம் மற்றும் கிளியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் விழுப்புரம் சைபர் க்ரைம் போலீசார் மற்றும் கிளியனூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஒட்டு கேட்கும் கருவி யார் வைத்தது என தனியார் புலனாய்வு நிறுவனத்துடன் பாமகவினர் புலன் விசாரணை நடத்தி வந்தனர். அதன் அடிப்படையில் மேலும் ஏதேனும் வீட்டில் உள்ளதா என புலனாய்வு செய்தனர். அப்போது போது டாக்டர் ராமதாஸ் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள வைஃபை, சிசிடிவி மற்றும் தொலைபேசி ஆகியவை ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தனியார் நிறுவனம் தெரிவித்தது. இதுதொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் உதவியாளர் சுவாமிநாதன் கோட்டகுப்பம் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

தடுப்புச்சுவரில் மோதி தூக்கி வீசப்பட்ட பைக்… விஏஓக்கள் 2 பேர் பலி!

தூத்துக்குடியில் சாலை தடுப்பில் டூவீலர் மோதி தூக்கி வீசப்பட்டதில் இரண்டு விஏஓக்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி டூவிபுரம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(62). கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தூத்துக்குடி பி அன்ட் டி காலனி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *