கையில் கம்புடன் போராட்டம் நடத்திய சீமான் மீது வழக்கு

போடி அருகே தடையை மீறி முந்தல் பகுதியில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 56 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாரம்பரிய நாட்டுமாடு இனமான மலைமாடுகளுக்கு வனப்பகுதியில் மேய்ச்சல் அனுமதி வழங்கக்கோரி, தேனி மாவட்டம் போடி அருகே முந்தல் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் நேற்று நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகித்தார். இப்போராட்டத்திற்கு வனத்துறை அனுமதி வழங்கவில்லை. அத்துடன் முந்தல் அடவுப்பாறை பகுதியில் தடுப்புகள் அமைத்திருந்தனர்.

தடையை மீறி தடுப்புகளை அகற்றி சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் செல்ல முயன்றனர். இதனால் அவர்களுக்கும் போலீஸாருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஆனால் தடையை மீறி அவர்கள் மாடுகளுடன் மலைப்பகுதீக்குச் சென்றனர். இந்த போராட்டத்தில் சீமான் கையில் கம்புடன் பங்கேற்றார். இந்த நிலையில், வனத்துறையினர் தடுத்து நிறுத்தியும் அத்துமீறி சென்று மாடு மேய்த்ததால் சீமான் உள்பட 56 பேர் மீது வன உயிரின விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

ஷாக்…. பிரபல மருத்துவமனையில் நர்ஸ் மர்ம சாவு!

பிரபல தனியார் மருத்துவமனையின் குளியலறையில் நர்ஸ் இறந்த நிலையில் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வரின் சந்திரசேகர் பகுதியில் பிரபலமான தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த சோனாலி ரவுத் என்ற…

சாத்தூர் அருகே பயங்கரம்- பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 3 பேர் பலி

சாத்தூர் அருகே சட்டவிரோதமாக இயங்கிய பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் பொன்னுபாண்டியன் . இவருக்குச் சொந்தமான வீட்டில் அனுமதியின்றி சட்டவிரோதமாக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *