தமிழக டிஜிபி திடீர் மாற்றம்…அரசு வெளியிட்ட முக்கிய உத்தரவு

தமிழ்நாடு பொறுப்பு டிஜிபியாக உள்ள வெங்கட்ராமன் உடல் நலக்குறைவால் விடுப்பில் உள்ளதால் அபய்குமார் சிங்கிற்கு பொறுப்பு டிஜிபி கூடுதல் பொறுப்பை வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 1991-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான டிஜிபி வெங்கட்ராமன், பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார். தற்போது தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டார். அண்மையில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தனர்.

இந்த நிலையில்,சட்​டம், ஒழுங்கு பொறுப்பு டிஜிபி​யாக உள்ள வெங்​கட​ராமனுக்கு நேற்று முன்​தினம் சுவாசிப்​ப​தில் சிரமம் இருந்​த​தாகக் கூறப்​படு​கிறது. இதையடுத்து அவர் சென்னை கிண்டி கலைஞர் நூற்​றாண்டு உயர் சிறப்பு மருத்​து​வ​மனைக்​குச் சென்​றார். அங்கு சில மருத்​து​வப் பரிசோதனை​கள் மேற்​கொள்​ளப்​பட்டன. தொடர்ந்​து, அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். டிஜிபி​யின் உடல்​நிலை சீராக இருப்​ப​தாக​வும் அவர் ஓய்வு எடுக்​க​வும் மருத்​து​வர்கள் அறி​வுறுத்​தினர்.

இதையடுத்து பொறுப்பு டிஜிபி​யான வெங்​கட​ராமன் வரும் டிசம்பர் .25-ம் தேதி வரை மருத்​துவ விடுப்பு எடுத்​துள்​ளார். இதன்​காரண​மாக டிஜிபி​ பொறுப்பை கூடு​தலாக அபய்​கு​மார் சிங்​குக்கு வழங்கி தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது. சுமார் 27 ஆண்​டு​கள் அனுபவமுள்ள அபய்​கு​மார் சிங். தற்​போது ஊழல் தடுப்பு மற்​றும் கண்​காணிப்​புத் துறை டிஜிபி​யாக உள்​ளார். அவருக்கு கூடுதலாக சட்​டம் ஒழுங்கு டிஜிபி பொறுப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது.

Related Posts

டெல்லி புறப்பட்டார் நயினார் நாகேந்திரன்…அமித்ஷாவுடன் முக்கிய ஆலோசனை!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (டிசம்பர் 13) டெல்லி புறப்பட்டுச் சென்றார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில்…

கரூர் துயரச் சம்பவம்… தவெக தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டம்!

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ விரைவில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *