பாபரின் பெயரில் எங்கு மசூதி கட்டினாலும் இடிப்போம்:பாஜக துணை முதல்வர் மிரட்டல்

பாபரின் பெயரில் யாராவது மசூதி கட்டினால், அதை எதிர்ப்பது மட்டுமல்லாமல், அது உடனடியாக இடிக்கப்படும் என்று உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா கூறியுள்ளார்.

மேற்கு வங்காளத்தில் உள்ள பரத்பூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ஹூமாயூன் கபீர். திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர்,
முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதி பாணியிலான மசூதி கட்டப்படும் என்று அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. உடனடியாக அவரை திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தார்.

இதனால் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக ஹூமாயூன் கபீர் அறிவித்துள்ளார். அத்துடன் இந்த மாத இறுதியில் தனிக்கட்சி தொடங்கி அனைத்து தொகுதியிலும் தன் கட்சி போட்டியிடும் என்றும் அறிவித்தார். மேலும், மேற்கு வங்காளத்தில் பாபர் மசூதிக்கான அடிக்கல் நாட்டு விழாவையும் தொடங்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “மசூதி கட்டுவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், பாபரின் பெயரில் யாராவது மசூதி கட்டினால், அதை எதிர்ப்பது மட்டுமல்லாமல், அது உடனடியாக இடிக்கப்படுவதை உறுதி செய்வோம்” என்றும் கூறியுள்ளார். ஏற்கெனவே உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் இருந்த பாபர் மசூதி 1992-ம் ஆண்டு இந்து அமைப்பினரால் இடித்து தள்ளப்பட்டது. தற்போது அங்கு 1,800 கோடி ரூபாய் செலவில் பால ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது.

Related Posts

தமிழக பாஜகவிற்கு கேரளா வெற்றி தந்த உற்சாகம்: நயினார் நாகேந்திரன் மகிழ்ச்சி

கேரளாவில் பெற்ற வெற்றி விரைவில் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (டிசம்பர் 15) வெளியிட்டுள்ள அறிக்கையில்,” கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுர மாநகராட்சியை பாஜக…

பாமகவில் ஏற்பட்ட பிரச்னைக்கு யார் காரணம்?: ஜி.கே.மணி மனந்திறந்த பேட்டி

அன்புமணியால் பாமகவுக்கு ஏற்பட்ட சோதனை, நெருக்கடி சொல்லி மாளாது என்று அக்கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார். பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ்க்கும், அவரது மகன் அன்புமணிக்கும் நடக்கும் அதிகார போட்டிகாரணமாக கட்சி இருபிரிவுகளாக இயங்கி வருகிறது. சட்டமன்ற தேர்தல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *