
கடலூரில் தகாத உறவு காரணமாக 4 வயது சிறுமியை கொலை செய்து விட்டு, சடலத்துடன் இரவு முழுவதும் தாய் சுற்றித்திரிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரத்தைச் சேர்ந்த தம்பதிக்கு இரண்டு ஆண், இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். அதில், 3 குழந்தைகளுடன், திண்டிவனத்தைச் சேர்ந்த சித்தப்பா மகன் வீட்டிற்கு தாய் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவர்களை மீண்டும் கடலூருக்கு பேருந்து ஏற்றி விட்டதாக சித்தப்பா மகன் தொலைபேசி மூலம் அப்பெண்ணின் கணவரிடம் கூறியதாக தெரிகிறது. ஆனால், குழந்தைகளும், மனைவியும் வீடு திரும்பாததால் அச்சம் அடைந்த கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.