
பேஸ்புக் நட்புக்கு மரியாதை கொடுத்து கடன் கொடுத்த ஆசிரியர் கடனை திருப்பி கேட்டபோது கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே திருமணி கிராமத்தை சேர்ந்தவர் 40 வயதான குமார். இவர் அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆர்வமுடன் செயல்பட்டு வந்த இவருக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்நத் முனுசாமி என்பவர் பழக்கமாகியிருக்கிறார். அதன்படி முகநூலில் இருவரும் நட்புடன் பழகி வந்தனர்.
இந்நிலையில், முனுசாமி, டீ கடை வைத்து தொழில் செய்ய சற்று பணம் தேவைப்படுவதாக ஆசிரியர் குமாரிடம் கேட்டுள்ளார். முகநூல் நட்புக்கு மரியாதை கொடுத்த ஆசிரியர் குமார், முனுசாமி கடனாக கேட்ட 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை மறுப்பேதும் சொல்லாமல் கொடுத்துள்ளார். கடனை பெற்ற முனுசாமி ஆரணி டவுன் அருணகிரிசத்திரம் பகுதியில் டீகடை ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்துள்ளார்.