கொழுந்தனார் சடலத்துடன் ஊர், ஊராக சுற்றிய அண்ணி… விசாரணையில் வெளியான குலைநடுங்க வைக்கும் சம்பவம்!

திண்டுக்கல் அருகே ராணுவத்தில் பணியாற்றி வந்த கணவரிடம் தன்னை தவறாக சித்தரித்து கூறியதோடு, அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த கொழுந்தனாரை அண்ணியே கொடூரமாக கொலை செய்துள்ளார். 
திண்டுக்கல் மாவட்டம் பாறையூரில் உள்ள ஊருக்கு ஒதுக்குப்புறமான தோட்டத்து கிணற்றில் 35 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் ஒன்று மிதந்துள்ளது. உடலை போலீசார் கைப்பற்றி உடற்கூராய்விற்கு அனுப்பி விசாரித்ததில், தூக்க மாத்திரைகளை கொடுத்து உயிருடன் கை, கால்களை கட்டி கிணற்றில் வீசி துடிதுடிக்க அவரை கொலை செய்யப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் அதிர்ச்சி கொடுத்தனர்.
இதனைக்கேட்டு அதிர்ந்துப் போன போலீசார் கொலை செய்யப்பட்ட யார்? கொலையாளிகள் யார்? என விசாரணையை தொடங்கினர். அப்போதுதான் கொலை செய்யபட்டவரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்து, நகை அடகு வைத்த பில் ஒன்றை கைப்பற்றி, அந்த அடகு கடையை தேடி சென்றனர். அதன் மூலம் கொலை செய்யப்பட்டவர் திண்டுக்கல் மாவட்டம் பூத்தம்பட்டியைச் சேர்ந்த ஜோதிமணி என்பவரென கண்டுபிடிக்கப்பட்டது.

  • Related Posts

    திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

    திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

    போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *