
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், முதல் நூறு இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மாணவர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.
இந்தியாவில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் நீட் தேர்வு கடந்த மாதம் 4ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் ராஜஸ்தானைச் சேர்ந்த மகேஷ் குமார் என்ற மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை நீட் தேர்விற்கு மொத்தம் 22,76,069 பேர் பதிவு செய்தனர். அதில் 22,09,318 பேர் தேர்வு எழுதினர். இதில் மொத்தம் 12,36,531 பேர் மருத்துவ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 5,14,063 பேர் ஆண்கள், 7,22,462 பேர் பெண்கள் மற்றும் 6 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவர்.