வெளியான நீட் தேர்வு முடிவுகள்.. இந்திய அளவில் முதல் 100 இடங்களில் 6 தமிழ்நாட்டு மாணவர்கள்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், முதல் நூறு இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மாணவர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.
இந்தியாவில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் நீட் தேர்வு கடந்த மாதம் 4ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் ராஜஸ்தானைச் சேர்ந்த மகேஷ் குமார் என்ற மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை நீட் தேர்விற்கு மொத்தம் 22,76,069 பேர் பதிவு செய்தனர். அதில் 22,09,318 பேர் தேர்வு எழுதினர். இதில் மொத்தம் 12,36,531 பேர் மருத்துவ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 5,14,063 பேர் ஆண்கள், 7,22,462 பேர் பெண்கள் மற்றும் 6 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவர்.

  • Related Posts

    நாளை காவலர்களுக்கான தேர்வு : தேர்வர்கள் செய்ய வேண்டியது என்ன?

    தமிழக காவல் துறையில் 2ஆம் நிலை காவலர் பணியிடங்களுக்கு நாளை எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. 3,655 இரண்டாம் நிலை காவலர் பணி இடங்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 45 இடங்களில் நடக்கும் தேர்வை,சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் எழுத…

    பட்டப்படிப்புக்கான இடஒதுக்கீட்டில் ஆபத்து! – கல்வியை தனியார்மயமாக்கும் புதிய சட்டம்- திமுக அரசு

    தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்ற அனுமதிக்கும் வகையில் ஆளும் திமுக அரசு சட்டமன்றத்தில் ஒரு சட்ட முன்வடிவை தாக்கல் செய்துள்ளது. அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு அதாவது, 2019-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்கள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *