
இன்றைய மாணவர்கள் எதிர்காலத்தில் பல்துறை வல்லுநர்களாகவோ, தொழில்முனைவோராகவோ மாற்றம் பெறுவதற்குக் கல்வி இன்றியமையாதது.
பத்தாம் வகுப்பிற்கு பிறகு 12ஆம் வகுப்பில் கணிதப் பிரிவைத் தேர்ந்தெடுத்துப் படித்து தேர்ச்சிபெற்ற மாணவர்கள் பெரும்பாலும் இன்ஜினியரிங் எனப்படும் பொறியியல் கல்வியைத் தேர்வு செய்து படித்து பொறியியல் பட்டதாரி ஆகின்றனர்.
பொறியியல் கல்வியைப் பொறுத்தவரையில் அதில் பல்வேறு பிரிவுகள் அடங்கியுள்ளன. இதில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் எனப்படும் இயந்திர பொறியியல் கல்வியைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அந்தத் துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் போன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பேராசிரியர் பிரபாகர்.