
இஸ்ரேல்-ஈரான் இடையிலான சண்டை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், ஈரானில் உச்சபட்ச அதிகாரம் கொண்ட தலைவரான ஆயதுல்லா அலி கமேனி எங்கு ஒளிந்திருக்கிறார் என்று தனக்கு தெரியும் எனவும், அவர் எளிதான இலக்கு என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்தார். அவரை கொல்லப் போவதில்லை என்று கூறிய டிரம்ப், கமேனி நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என எச்சரித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தனது எக்ஸ் பக்கத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கமேனி, ‘போர் தொடங்கி விட்டது’ என பதிவிட்டார். அதேபோல், செய்தியாளர்களை சந்தித்த ஈரான் பாதுகாப்பு படை அதிகாரி, இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் மற்றும் ஜஃப்பாவில் இருந்து பொதுமக்கள் வெளியேறுமாறு எச்சரித்திருந்தார்.
இதற்கிடையில், ஈரானில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க ஏற்கனவே இந்திய வெளியுறவுத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும், இன்று 110 இந்திய மாணவர்களை ஈரானில் இருந்து அர்மேனியன் எல்லைக்கு அழைத்து வரப்பட்டு, அவர்களை இந்தியாவிற்கு அழைத்து வரும் நடவடிக்கையிலும் இந்தியா இறங்கியுள்ளது.