உடலில் இருந்த காயங்கள்.. மாடல் அழகி ஷீத்தல் சவுத்ரி கொலை வழக்கில் வெளியான பகீர் தகவல் – காதலன் செய்த கொடூரம்!

ஹரியானா மாடல் அழகி ஷீத்தல் சவுத்ரி கொலை வழக்கில் அவரது காதலனே கழுத்தை அறுத்து கொலை செய்திருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 
ஹரியானாவைச் சேர்ந்த 24 வயது மாடல் அழகி ஷீத்தல் சவுத்ரி. இவர் தனது சகோதரியுடன் பானிபட் பகுதியில் வசித்து வந்தார். திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ஷீத்தல் சிறு சிறு இசை ஆல்பங்களை தயாரித்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஜுன் 14ம் தேதி படப்பிடிப்புக்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனிடையே, அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் ஷீத்தலின் சகோதரி பானிபட் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்த நிலையில், கடந்த ஜூன் 16 ஆம் தேதி சோனிபட்டின் கார்கோடா பகுதிக்கு அருகிலுள்ள கால்வாயில் இருந்து ஷீத்தலின் உடல் மீட்கப்பட்டது. அவரது உடல் மற்றும் கைகளில் பச்சை குத்தப்பட்டிருந்ததை வைத்து அவரது அடையாளம் உறுதி செய்யப்பட்டது.

  • Related Posts

    நடிகர் அபினய் காலமானார்… சோகத்தில் முடிந்த சாக்லேட் பாயின் வாழ்க்கை!

    சென்னையில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகர் அபினய் இன்று காலமானார் அவருக்கு வயது 44. நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் அபினய். அதனைத்தொடர்ந்து ஓரிரு படங்களிலும் நடித்தார். விஜய்யின் ‘துப்பாக்கி’ திரைப்படத்தில்…

    வெள்ளை சட்டையில், மாஸ் லுக்’கில் ‘அரசன்’ : நடிகர் சிம்பு டிரெண்டிங்

    வெள்ளைச் சட்டையில், படு மாஸ் லுக்’கில் தான் நிற்கும் புகைப்படங்களை, நடிகர் சிலம்பரசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது நடிகர் சிம்புவின், இந்த மாஸ் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அரசன் ப்ரோமோ கலைப்புலி எஸ்.தாணு…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *