
தஞ்சாவூர் ஸ்ரீ ராமானுஜர் தர்சனசபை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் தஞ்சாவூரில் 91-ம் ஆண்டாக 26 கருட சேவைகள் இரண்டு நாள்கள் தஞ்சையில் நடைபெற்றன.
தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகத் திகழும் ஸ்ரீ நரசிம்ம பெருமாள் கோவில் சன்னதியில் திவ்ய தேச பெருமாள்களுக்குத் திருமங்கையாழ்வார் மங்களாசாசனத்துடன் தொடங்கியது.
16-ம் தேதி தொடங்கிய இவ்விழாவில் காலை 6 மணிக்கு வெண்ணாற்றங்கரை திவ்ய தேசங்களில் உள்ள நரசிம்மர், மணிக்குன்றப் பெருமாள், ஆண்டான் சமேத நீலமேகப் பெருமாள் கருட வாகனத்திலும், உடன் திருமங்கையாழ்வார் அன்ன வாகனத்திலும் புறப்பட்டு, கொடிமரத்து மூலையில் வந்து சேர்ந்தனர்.