முதல் கட்சியாக முந்திக் கொண்ட தவெக: சின்னம் கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு!

சட்டமன்ற தேர்தலுக்காக பொதுச்சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடுவதற்கு பொதுச்சின்னம் ஒதுக்கக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் இன்று (நவம்பர் 11) தமிழக வெற்றிக் கழகம் மனு அளித்துள்ளது. அக்கட்சியின் இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், மாநில நிர்வாகிகள் புஷ்பவனம் குப்புசாமி, அர்ஜுனமூர்த்தி, விஜயபிரபாகரன் உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் சென்று மனுவை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் ஆணையர்களிடம் நேரடியாக வழங்கினர். இந்த மனுவில், 10 விருப்ப சின்னங்களின் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் “கட்சி 07.02.2025 அன்று பதிவு செய்யப்பட்டு, மாநிலக் கட்சி அந்தஸ்து பெறும் நடைமுறைகள் நிறைவடைந்துள்ளன. 234 தொகுதிகளிலும் போட்டியிட தயாராக உள்ளதால், பொதுச் சின்னம் உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என்று தேர்தல் ஆணையத்திடம் தமிழக வெற்றிக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

தேர்தல் ஆணைய விதிகளின்படி, புதிய கட்சிகளுக்கு முதல் தேர்தலில் பொது சின்னம் ஒதுக்கீடு செய்ய முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி தவெக முதல் கட்சியாக நவம்பர் மாதத்திலேயே மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

‘இதற்காகவே இந்தியாவின் வரி குறைக்கப்படும்’…டிரம்ப் அறிவிப்பு!

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை கணிசமாக குறைத்துள்ளதால் இந்தியாவின் வரி குறைக்கப்படும் என அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பதவியேற்பு விழாவில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டு…

எனது தந்தை தர்மேந்திரா நலமுடன் உள்ளார்… நடிகை ஈஷா தியோல் விளக்கம்

பாலிவுட் திரையுலகின் பழம் பெரும் நடிகர் தர்மேந்திரா இன்று காலமானார் என்ற செய்தியை அவரது மகள் நடிகை ஈஷா தியோல் மறுத்துள்ளார். இந்திய திரையுலகில் பிரபல நடிகராக விளங்கியவர் தர்மேந்திரா. இவர் ‘ஆயி மிலன் கி பேலா’, ‘ஃபூல் அவுர் பத்தர்’,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *