தமிழ் கடவுளுக்கு தமிழில் குடமுழுக்கு… திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் அறிவிப்பு…

உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் ஜூலை மாதம் 7ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது.
இதனையொட்டி கோவிலில் ரூபாய் 300 கோடி மதிப்பில் பெருந்திட்ட பணிகள் நிறைவு பெற்றன. இந்த பெருந்திட்ட பணியில் திருமண மண்டபம், கலையரங்கம், பூங்கா, அன்னதான மண்டபம், பக்தர்கள் தரிசன வரிசை, பக்தர்கள் தங்கும் விடுதிகள், ராஜகோபுரம் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடிவடைந்தன.
இந்நிலையில் ஜூலை மாதம் 7ஆம் தேதி காலை 6.15 மணிக்கு குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் இதில் வேதபாராயணம், திருமுறை விண்ணப்பம் மற்றும் நாதசுவர இன்னிசை ஆகியவை நடைபெறும் எனவும், பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதல் நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Related Posts

    திருவண்ணாமலை கோயிலுக்குள் செல்போனுக்கு தடை.. மாவட்ட ஆட்சியர் ஆலோசனை!

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் செல்போன்களை கொண்டுசெல்ல தடைவிதிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. திருவண்ணாமலை கோயிலுக்கு பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், தரிசனத்துக்கு சாதாரண நாட்களில் கூட 2 முதல்…

    திருச்செந்தூர் முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு.. கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

    திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு வரும் ஜூலை 7-ந் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. தொடர்ந்து ஜூலை 1-ந் தேதி முதல் 7 நாட்கள் வேள்விச்சாலை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *