500 கிலோ மாம்பழம்… மாஸாக நின்ற மாருதி… நாமக்கல் நாயகனுக்கு பக்தர் செய்த செயல்…

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் ஒரே கல்லினால் ஆன 18 அடி உயரத்தில் இரு கைகளைக் கூப்பி வணங்கியவாறு பிரம்மாண்ட ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார்.
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு நாள்தோறும், சனிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் ஆஞ்சநேயருக்கு பால், மஞ்சள், சந்தனம், தயிர் மற்றும் வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மேலும் மார்கழி மாதத்தில் வெண்ணெய் காப்பு, சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்படும். மற்ற நாட்களில் தங்க கவசம், முத்தங்கி, வெற்றிலை மற்றும் புஷ்ப அலங்காரம் செய்து அபிஷேகம் செய்யப்படும்.
நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபடத் தமிழகம் மற்றும் வெளிமாநிலத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தற்போது மாம்பழ சீசனை முன்னிட்டு ஆஞ்சநேயர் பக்தரான ரவிக்குமார் என்பவர் சார்பில் 500 கிலோ எடையில் நீல ரகத்தைச் சேர்ந்த சுமார் 1500 மாம்பழங்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுச் சிறப்புப் பூஜை செய்யப்பட்டது.
  • Related Posts

    திருவண்ணாமலை கோயிலுக்குள் செல்போனுக்கு தடை.. மாவட்ட ஆட்சியர் ஆலோசனை!

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் செல்போன்களை கொண்டுசெல்ல தடைவிதிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. திருவண்ணாமலை கோயிலுக்கு பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், தரிசனத்துக்கு சாதாரண நாட்களில் கூட 2 முதல்…

    திருச்செந்தூர் முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு.. கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

    திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு வரும் ஜூலை 7-ந் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. தொடர்ந்து ஜூலை 1-ந் தேதி முதல் 7 நாட்கள் வேள்விச்சாலை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *