
பாரம்பரிய வழக்கங்கள் பலவற்றின் எளிமை தன்மை நம்மை ஆச்சரியப்பட வைக்கும். பல வீடுகளில் வீட்டின் நுழைவாயிலில் துளசி செடி வைக்கப்பட்டு இருப்பதை நீங்கள் கவனித்திருக்க வேண்டும். இது ஆன்மீகம் சார்ந்த காரணங்களுக்காக மட்டுமல்லாமல், அமைதியையும், வலிமையையும் நமக்குள் ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. அப்படி 3 துளசி இலைகளை சாப்பிடுவதால் வெறும் 40 நிமிடங்களில் கார்டிசால் அளவுகள் குறையும் என்று சொல்லப்படுகிறது. இது உங்களுக்கு ஒரு மாயம் போல தெரியலாம். ஆனால் இது உண்மையா? இது பற்றிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
கார்டிசால் என்றால் என்ன?
கார்டிசால் என்பது பெரும்பாலும் ‘மன அழுத்த ஹார்மோன்’ என்று அழைக்கப்படுகிறது. இது உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சவால்களுக்கு நம்முடைய உடல் எப்படி எதிர்வினை ஆற்றுகிறது என்பதற்கு உதவுகிறது. ஆனால் நீண்ட நேரத்திற்கு கார்டிசால் அளவுகள் அதிகமாக இருந்தால் அதனால் எரிச்சல், தூங்குவதில் பிரச்சனைகள், சோர்வு மற்றும் சில சமயங்களில் ஞாபக சக்தி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கூட பாதிக்கப்படலாம். எனவே இந்த இடத்தில் தான் துளசி என்ற மூலிகை நமக்கு உதவியாக வருகிறது. துளசி என்பது உடலின் அமைப்புகளை சமநிலையில் வைப்பதற்காக ஆயுர்வேதத்தில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் மன அழுத்தத்தில் துளசி இலைகளின் விளைவுகள் பற்றி நவீன அறிவியல் கூறுவது என்ன?