சிம்புவின் ‘அரசன்’ படம் தரமான சம்பவம் – எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் கவின்

‘அரசன்’ படத்தின் கதை எனக்கு நல்லா தெரியும், சிறப்பான சம்பவமா படம் இருக்க போகுது” என்று நடிகர் கவின் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளது, “அரசன்” படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெற்றிமாறன் – சிம்பு கூட்டணி

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நாயனாக நடிக்கும் படம் “அரசன்”. இப்படத்தின் மூலம் முதல்முறையாக வெற்றிமாறன்- சிம்பு – அனிருத் என மூவரும் இணைய உள்ளனர். இப்படத்தின் ப்ரோமோ சென்ற மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘வடசென்னை’ டூ ‘அரசன்’

அரசன் திரைப்படம்
‘வடசென்னை’ கதைக்குள் வருவதால், நடிகர் தனுஷ் ஒரு ரூபாய் கூட வாங்காமல் NOC கொடுத்ததாக தகவல் வெளியானது. “வடசென்னை” படத்தை முழுவதுமாக முடித்து, அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

ஆனால், வெற்றிமாறன் ஒரு படத்தை எடுத்தால் வருடக்கணக்கில் நேரம் எடுத்துக் கொள்வார். இருப்பினும் இப்படம் 2026ம் ஆண்டு நிச்சயம் வெளியாகும் என்றும் மிகபெரிய வெற்றியை பதிவு செய்யும் என்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

நடிகர் கவின் புகழாரம்

இந்நிலையில், நடிகர் கவின் நடிப்பில் “மாஸ்க்” படம் வரும் 21ம் தேதி வெளியாகிறது. இப்படத்தை பாடகியும், நடிகையுமான ஆண்ட்ரியா தயாரித்து, முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடிக்கிறார். இப்படத்திற்கான நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் கவின், “அரசன்” படம் சம்பவம் செய்ய போகிறது என்று புகழ்ந்து பேசியுள்ளார்.

தரமான சம்பவம்:-

மேலும் அவர் கூறியதாவது, “அரசன் படத்தினை பற்றி எனக்கு எல்லாமே தெரியும் என்றும், ஆனால் அதனை நான் வெளியில் சொல்ல மாட்டேன். கதை தரமா இருக்கும் “ என்று தெரிவித்தார்.

“இப்படம் வெற்றிமாறன், சிம்பு, அனிருத் ரசிகர்களை கண்டிப்பாக திருப்திப்படுத்தும். எஸ்டிஆர் – வெற்றிமாறன், அனிருத் – சிம்பு, வெற்றிமாறன் – அனிருத் ஒரே படத்தில் இணைவது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக நடிகர் கவின் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்த காம்போவை பார்ப்பதற்கு எதிர்பார்ப்புடன் இருக்கிறேன் என்று கூறிய நடிகர் கவின் “அரசன்” படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்திவிட்டார்.

“அரசன்” படத்தில் யார்? யார்? நடிக்க உள்ளார்கள் என்பது சஸ்பென்ஸ் ஆக உள்ளது.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *