விஜய்க்கு மறைமுகமாக சப்போர்ட் செய்த நடிகர் அஜித் :இணையத்தில் வைரலாகும் வீடியோ

கரூர் சம்பவத்திற்கு தனிநபர் மட்டும் காரணம் கூற முடியாது என நடிகர் அஜித்குமார் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு மறைமுகமாக ஆதரவு

தனியார் டிஜிட்டல் ஊடகத்திற்கு நடிகர் அஜித் குமார் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், கரூர் சம்பவம் பற்றியும்; மறைமுகமாக தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாகவும் பேசி உள்ளார்.

 

வீடியோவை ஷேர் செய்யும் விஜய் ரசிகர்கள்

கரூர் சம்பவத்தை பற்றி, நடிகர் அஜித் பேசிய அந்த வீடியோவை, விஜய் ரசிகர்களும்; தவெகவினரும் சமூக வலைத்தளங்களில் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள்.

பேட்டியில் அஜித் குமார் கூறியதாவது, “கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு அந்த தனி நபரை மட்டுமே காரணமாக சொல்ல முடியாது. எல்லோரும் அதற்கு பொறுப்பு என்றார்

 

நடிகர் அஜித் கேட்கும் கேள்விகள்?

“கிரிக்கெட் போட்டியை காண கூட்டம் சேரும் போது இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடப்பதில்லை, தியேட்டர்களிலும் சினிமா பிரபலங்களை பார்க்கும் போது மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? என்றும்;

ஒரு பெரிய கூட்டத்தை கூட்டி நாம் யார் என்பதை காட்டக்கூடிய சமுதாயமாக மாறிவிட்டோம். இது முடிவுக்கு வர வேண்டும்.

“கூட்டத்தைக் கூட்டுவது பெருமையா..?” என்றும் நடிகர் அஜித்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *