குருபூஜை கோலாகலம் – மதுரை தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு மதுரையில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின், 118வது ஜெயந்தி மற்றும் 63ம் ஆண்டு குருபூஜை இன்று நடைபெறுகிறது. இவ்விழா அரசு விழாவாக நடைபெறுகிறது. இதனையடுத்து மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், பெ.மூர்த்தி சாத்தூர் ராமச்சந்திரன், அன்பில் மகேஷ், கே.ஆர்.பெரியகருப்பன், டி.பி.ஆர்.ராஜா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி உள்பட ஏராளமானோர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

இதன் பின் சிலைக்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த தேவர் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மாநகரில் 3,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள  தேவர் நினைவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்த உள்ளனர். அதிமுக, காங்கிரஸ், மதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்துகின்றனர்.

 

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *