சுற்றுலா பயணிகள் சென்ற விமானம் தரையில் மோதி தீப்பிடித்தது…12 பேர் பலி

கென்யாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் கீழே விழுந்து தீப்பிடித்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.

கென்யாவில் டயானியில் இருந்து கிச்வா டெப்போவுக்கு 5Y-CCA என்ற என்ற சிறிய ரக விமானம் ஹங்கேரி மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்றது. இந்த விமானம் கென்யாவின் கடலோரப் பகுதியான குவாலேயில் திடீரென கீழே விழுந்து தீப்பிடித்தது. இதில் விமானத்தில் இருந்த 12 சுற்றுலா பயணிகளும் உயிரிழந்தனர். கென்யா சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இந்த சம்பவத்தை தனது சமூக ஊடகப் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.

இந்த விபத்து குறித்து டைரக்டர் ஜெனரல் எமிலி அராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டயானியில் இருந்து கிச்வா டெம்போ செல்லும் வழியில் 5Y-CCA என்ற விமானம் விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த இடத்திற்கு மீட்புப் பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். குவாலே மாவட்ட ஆணையர் ஸ்டீவன் ஓரின்டே, கவுண்டி விபத்தை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்” என்று தெரிவித்துள்ளார். இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *