அதிர்ச்சி…டெல்லி விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து!

டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் உள்ளது. இன்று விமான நிலையத்தில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்தில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ விபத்து நடந்த சில அடி தூரத்தில் பயணிகள் விமானம் நின்றது. ஆனால் அதிர்ஷ்டவசமாக விமானத்திலோ, தீப்பிடித்த பேருந்திலோ யாரும் இல்லை. தீ விபத்து ஏற்பட்டவுடன் விமான நிலைய காவலர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும், அருகில் நின்ற விமானங்களுக்குச் சேதம் ஏற்படவில்லை’ என்று டெல்லி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேருந்தில் தீ எப்படி பிடித்தது என விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *