பாலிவுட் நடிகையுடன் ஜல்சா…ஏ.ஐ ஆபாச வீடியோக்களைத் தடுக்க நடிகர் சிரஞ்சீவி புகார்

பாலிவுட் நடிகையுடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற பொய்யான வீடியோக்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி போலீஸில் புகார் அளித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான சிரஞ்சீவி, மெகா ஸ்டார் என்ற அம்மாநில ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் சைபர் கிரைம் போலீஸில் ஐந்து பக்க புகார் கடிதத்தை நடிகர் சிரஞ்சீவி கொடுத்துள்ளார். அதில், செயற்கை நுண்ணறிவான ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாச டீப்ஃபேக் வீடியோக்களில் தான் இருப்பது போன்ற சித்தரிக்கப்பட்டது குறித்து கவலையுடன் அவர் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில்,” ஏ.ஐ தொழில் நுட்பத்தால் ஜோடிக்கப்பட்ட வீடியோக்கள் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதுடன், தனியுரிமை மற்றும் கண்ணியத்திற்கான அரசியலமைப்பு உரிமையையும் மீறுகின்றன. மூன்று வலைதளங்களில், பாலிவுட் நடிகையுடன் பாலியல் நடவடிக்கைகளில் நான் ஈடுபடுவது போன்ற பொய்யான வீடியோக்களை பதிவு செய்வதன் மூலம் சிலர் பணம் சம்பாதிக்கின்றனர். இந்த ஜோடிக்கப்பட்ட வீடியோக்கள் என்னை ஆபாசமான மற்றும் அநாகரீமான சூழல்களில் சித்தரிக்கவும், பொதுமக்கள் மத்தியில் என் மீது இருக்கும் நல்லெண்ணத்தை சேதப்படுத்தவும் தீய நோக்கத்துடன் பயன்படுத்தப்படுகின்றன. இது போன்ற வீடியோக்களால் நானும், எனது குடும்பத்தினர் கடும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளோம். .ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட இந்த வீடியோக்கள் மூலம் வணிக லாபம் ஈட்டுவோர் மீது சைபர் கிரைம் போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று  வலியுறுத்தியுள்ளார்.

மேலும் ஏ.ஐ தொழில்நுட்பத்தால் போலியாக உருவாக்கப்பட்ட ஆபாச வீடியோக்கள் அடங்கிய வலைதள இணைப்புகளையும் அவர் காவல்துறையில் சமர்பித்தார். உடனடியாக அனைத்து தளங்களிலும் இருந்து செயற்கையாக உருவாக்கப்பட்ட தனது ஆபாச வீடியோக்களை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *