பாடலாசிரியர் சினேகனின் தந்தை மரணம்

திரைப்பட பாடலாசிரியர் சினேகனின் தந்தை சிவசங்கு வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 102.

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி கவிஞரான சினேகன்.2,500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். இவர் தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள புது காரியப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி மாநிலச் செயலாளராக சினேகன் உள்ளார். இவரது தந்தை சிவசங்கு வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலமானார்.

அவரின் இறுதிச்சடங்கு நாளை (அக்.28) காலை 11:00 மணி அளவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எனது சொந்த கிராமம் புது காரியப்பட்டியில் நடைபெற இருப்பதாக சினேகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கவிஞர் சினேகனுக்கு திரைப்படத்துறையினர், அரசியல்வாதிகள் பலர் ஆறுதல் கூறி வருகின்றனர்.

 

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *