நிலச்சரிவில் புதைந்தது வீடு… 7 மணி நேரமாக நடைபெற்ற மீட்பு போராட்டம்!

கேரளாவில் நேற்று நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு வீடு புதைந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கேரளா மாநிலம், அடிமாலியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை அருகே மலையில் திடீரென  நேற்று நள்ளிரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், பாறைகள் இடிந்து விழுந்ததில்  ஒரு வீடு புதைந்தது. இதையறிந்த மீட்பு படையினர், போலீஸார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஜேசிபி இயந்திரங்கள் மூலம் பாறைகளை அகற்றும் பணி நடைபெற்றது. பலமணி நேரமாக மீட்பு நடவடிக்கை நடைபெற்றது. இதனால் அந்த வீட்டிற்குள் இருந்த பிஜு , அவரது மனைவி சந்தியாவின் நிலைமை என்ன ஆனது என்ற கேள்விக்குறி ஏற்பட்டது.

பெரிய கான்கிரீட் கற்கள் இடிந்து சுவர்களில் விழுந்ததால் படுக்கை மற்றும் அலமாரி ஆகியவற்றுக்கு இடையே தம்பதியினர் சிக்கிக் கொண்டனர், இதனால் மீட்புப் பணியாளர்கள் அவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதன் பின் 7 மணி நேரப்போராட்டத்திற்குப் பிறகு அந்த வீட்டிற்குள் இருந்த இருவரையும் மீட்பு படையினர் மீட்டனர்.

அவர்கள் இருவரையும் கொச்சியில் உள்ள ராஜகிரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், பிஜு ஏற்கெனவே உயிரிழந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். படுகாயங்களுடன் சந்தியா சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *