முதியோர் இல்லத்துக்கு ரூ.22 கோடி அபராதம்… மூதாட்டி மரணத்திற்கு சவுக்கடி தீர்ப்பு!

உணவு சாப்பிடும் போது மூச்சுத்திணறி 96 வயது மூதாட்டி இறந்ததால் முதியோர் இல்லத்துக்கு 22 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்து நாட்டில் இன்வெர்னஸ் நகரில் கிராடில்ஹால் முதியோர் பராமரிப்பு இல்லம் உள்ளது. இது நாடு முழுவதும் சுமார் 200 கிளைகளைக் கொண்டுள்ளது. இந்த காப்பகத்தில் பெக்கி கேம்பல் என்ற 96 வயது மூதாட்டி தங்கியிருந்தார். இவர் கடந்த 2022-ம் ஆண்டு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

அப்போது முதியோர் இல்லத்தில் கவனத்துக் கொள்ளும் ஊழியர்கள் அங்கு இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் சில மணி நேரத்திலேயே மூதாட்டி பெக்கி கேம்பல் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்வெர்னஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில் கிராடில்ஹால் முதியோர் பராமரிப்பு இல்லத்திற்கு சுமார் 22 கோடி ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள முதியோர் பராமரிப்பு இல்லங்களில் ஆறு ஆண்டுகளில் இது ஐந்தாவது தண்டனையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *