தவெக கட்சியை விட்டு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை நீக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்ல பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த கரூர் சம்பவம் பற்றி பேச ஆரம்பித்த ஊடகங்கள் இன்னும், முடித்த பாடில்லை.
தவெக சார்பில் நிவாரணம்:
இந்நிலையில் முதற்கட்டமாக, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் கட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்தகட்டமாக படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் தவெக சார்பில் வழங்கப்பட உள்ளது.

தலைமறைவான புஸ்ஸி ஆனந்த் :-
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சம்பவம் நடந்த அடுத்த நாளிலிருந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை காணவில்லை! தலைமறைவாகிவிட்டார்.
இவர் மீது காவல்துறை தரப்பில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் புஸ்ஸி ஆனந்த் தரப்பில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவர் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பதுங்கி இருப்பதாக ஒரு தகவலும் 2 வாரங்களுக்கு முன் வெளியானது.
ஆனால் இன்றுவரை புஸ்ஸி ஆனந்த் எங்கே பதுங்கி இருக்கிறார்? என்ற உண்மை தகவல் வெளியாகவில்லை. அவரும் கரூர் சம்பவத்திற்கு அடுத்து வெளி உலகத்திற்கு வந்து தன் முகத்தையும் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புஸ்ஸி ஆனந்த் வேண்டாம் :
மேலும், சாதாரண வழக்கிற்கு கூட நின்று போராடாமல் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஒளிந்திருந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
புஸ்ஸி ஆனந்தை நம்பி விஜய் இந்த கட்சியை தொடங்கியுள்ளாரே என்றெல்லாம் கூறப்படுகிறது. அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.


