தேசிய விருது வென்ற படத்தின் 2ம் பாகம் : படப்பிடிப்பு நிறைவு

தேசிய விருது பெற்ற “குற்றம் கடிதல்” படத்தின் 2ஆம் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய விருது :-

கடந்த 2015-ம் ஆண்டு பிரம்மா இயக்கத்தில் உருவான ‘குற்றம் கடிதல்’ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்திற்கு “தமிழில் சிறந்த படத்திற்கான தேசிய விருதும்” கிடைத்தது.

பாலியல் கல்வி குறித்தும், ஆசிரியர் – மாணவர்களுக்கு இடையேயான புரிதல் மற்றும் முரண் குறித்தும், இந்தப் படத்தில் இயக்குநர் பிரம்மா யதார்த்தமாக காட்சிப்படுத்தி இருப்பார்.

குற்றம் கடிதல் -2

இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு, “குற்றம்- கடிதல்-2” படம் உருவாகி உள்ளது. திரைக்கதை எழுதிய இப்படத்தை எஸ்.கே. ஜீவா என்பவர் இயக்கியுள்ளார்.
எஸ்.கே. ஜீவா பார்த்திபன் நடித்த ‘புதுமைப்பித்தன்’, கார்த்திக் நடித்த ‘லவ்லி’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

தயாரிப்பாளர் டூ நடிகர் :-

முதல் பாகத்தை தயாரித்த ஜே.எஸ்.கே. சதீஸ்குமார், 2ம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அப்புக்குட்டி, பாலாஜி, சாந்தினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

குற்றம் கடிதல்-2” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து, படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *