நாட்டு வெடி வெடித்து வீடு தரைமட்டம்…4 பேர் உயிரிழப்பு

ஆவடி அருகே நாட்டு வெடி வெடித்து வீடு தரைமட்டமானதில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை ஆவடி அருகே பட்டாபிராம் பகுதியில் தண்டுரை விவசாயி தெருவில் ஒரு வீட்டில் நாட்டு வெடி தயாரிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று நாட்டு வெடி வெடித்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். வெடி வெடித்ததில்  வீடு முழுவதும் தரைமட்டமானது. இதையடுத்து சம்பவம் நடந்த இடத்தில் ஆவடி தீயணைப்பு மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நாட்டு வெடி விபத்து ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்தினர். இதில் சுனில், பிரகாஷ், யாசின் உள்பட 4 பேர் உயிரிழந்தத தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து பட்டாபிராம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *