ஆர்எஸ்எஸ் அணிவகுப்பில் பங்கேற்ற பஞ்சாயத்து அலுவலர் சஸ்பெண்ட்

கர்நாடகாவில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பில் கலந்துகொண்ட பஞ்சாயத்து வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் பொது இடங்கள், பள்ளிக்கூட வளாகங்கள் போன்றவற்றில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நடைபெற தடைவிதிக்கும் வகையில் விதி கொண்டுவர அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியில் அந்த அமைப்பின் சீருடை அணிந்து கலந்துகொண்ட பஞ்சாயத்து வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு லிங்கசுகூரில் நடைபெற்ற அணிவகுப்பில் சிர்வார் தாலுகா பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரி பிரவீன் குமார் சீருடை அணிந்து தடி ஏந்தி பங்கேற்றார். இந்த செயல் அரசு ஊழியர்களின் நடத்தை விதிமுறைகளை மீறுவதாக புகார் எழுந்தது. ராய்ச்சூர் மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, பஞ்சாயத்து ராஜ் துறை ஆணையர் அருந்ததி சந்திரசேகர், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பில் பங்கேற்ற பிரவீன் குமாரை இடைநீக்க உத்தரவைப் பிறப்பித்தார்.

இந்த நடவடிக்கை சட்டவிரோதமாது என்று பாஜக யுவ மோர்ச்சா தலைவர் தேஜஸ்வி சூர்யா கூறியுள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் தளத்தில், “அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் உரிமையை நிலைநிறுத்திய உயர் நீதிமன்றங்கள் பலவற்றிலிருந்து பல தீர்ப்புகள் உள்ளன. இந்த சட்டவிரோத இடைநீக்கம் ரத்து செய்யப்படும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்று தேஜஸ்வி சூர்யா பதிவிட்டுள்ளார்.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *