தீபாவளி… புதுச்சேரியிலும் அக்டோபர் 21 அரசு விடுமுறை!

தீபாவளி கொண்டாட்டம் காரணமாக தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் அக்டோபர் 21 அன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் அக்டோபர் 20-ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வெளியூரில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், அரசுஅலுவலர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோர் அவர்களது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்புவார்கள். அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தீபாவளிக்கு மறுநாள் (அக்டோபர் 21). 5 அன்று ஒரு நாள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அரசு விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு நேற்று இரவு உத்தரவிட்டது.

இந்த நிலையில் புதுச்சேரியிலும் அக்டோபர் 21-ம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்கப்படுள்ளது. அன்றைய தினம் புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அக்டோபர் 21 அன்று அரசு விடுமுறை என முதலமைச்சர் ரங்கசாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *