இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான ஆா்.நல்லகண்ணுவிற்கு 100 வயதாகிறது. கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி அவர் வீட்டில் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதனிடையே, திடீர் மூச்சுத் திணறல் காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நல்ல கண்ணுக்கு மூத்த மருத்துவர்கள் தலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்த நிலையில், கடந்த வாரம் 10-ந்தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
இந்த நிலையில், இன்று காலை நல்லகண்ணுக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று அதிகாலை 2 மணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டியூப் மூலம் உணவு செலுத்தப்படுகிறது. நேற்றிரவு உணவு உட்கொள்வதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நேரில் சென்று நலம் விசாரித்தார்.


