சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு- 2 நாட்களுக்கு சாமி தரிசனத்திற்கு தடை!

இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சபரிமலை செல்வதால் அக்.21,22 ஆகிய தேதிகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இந்திய முழுவதும் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, அக்டோபர் 17-ந் தேதி திறக்கப்படுகிறது. இந்த நிலையில், கேரளாவிற்கு இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இம்மாத இறுதியில் சாமி தரிசனம் செய்ய வருகிறார்.

இதற்காக கேரளா தலைநகர் திருவனந்தபுரத்துக்கு அக்டோபர் 21-ம் தேதி செல்லும் திரவுபதி முர்மு அக். 22-ம் தேதி பம்பை அருகே உள்ள நிலக்கல்லுக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் பம்பைக்கு வரும் திரவுபதி முர்மு, இருமுடி கட்டி தேவஸ்தானத்தின் சிறப்பு வாகனம் மூலம் சபரிமலை சென்று தரிசனம் செய்கிறார். அவரின் சபரிமலை வருகையால் அக். 21,22 ஆகிய நாட்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் முன்பதிவும் ரத்து செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

திருச்செந்தூர் போறீங்களா?…கடற்கரையில் இரவு இனி தங்க முடியாது!

திருச்செந்தூர் கடற்கரையில் இரவு நேரத்தில் பக்தர்கள் தங்குவதற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழ்கிறது. இந்த கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி…

தமிழ்நாடு ஆம்னி பேருந்துகள் கேரளாவிற்கு செல்லாது…திடீர் அறிவிப்பின் பின்னணி என்ன?

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு ஆம்னி பேருந்துகள் செல்லாது என்று அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *