நட்சத்திர ஓட்டலில் நைட் பார்ட்டி: போதையில் குத்தாட்டம் போட்ட இசையமைப்பாளர் மகள் கைது!

சென்னையில் பிரபல நட்சத்திர ஓட்டலில் போதையில் ஆட்டம் போட்ட  இசையமைப்பாளர் மகள் உள்பட 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் பிரபல ஓட்டல்களில் உள்ள பப்புகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் உள்ள பப்பில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பார்ட்டி நடைபெறுவதாக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு போலீஸார் விரைந்து சென்று சோதனை நடத்தினர்.அப்போது பார்ட்டி முடிந்த சில இளைஞர்களும், இளம்பெண்களும் அதே ஓட்டல் அறைகளில் கஞ்சா புகைத்​த​வாறு குத்​தாட்​டம் போட்​டுக் கொண்​டிருந்​தனர். இதையடுத்​து, அங்கிருந்த சென்னை மண்​ணடி முகமது இர்​பான் (30), அபிலாஷ் (27), மப்பா (32), அப்​துல் ஹக் (34), பெருங்​களத்​தூர் சக்​திவேல் (36), புளியந்​தோப்பு ஜனார்த் (26), நம்​மாழ்​வார்​பேட்டை கணேஷ் (32), ஏழுகிணறு இப்​ராகிம் (30), பெரியமேடு முகமது சாலிக் (25), கிண்டி ஆகாஷ் (27), மந்​தைவெளி தசரத​ராஜ் (24), சிங்​கப்​பூர் மகமதுபர்​கான் (27), புரசை​வாக்​கம் வினோதன் (30), கொண்​டித்​தோப்பு துளசி​ராமன் (23), விரு​கம்​பாக்​கம் துர்கா பவானி (23), சூளைமேடு ப்ர​வல்​லிகா (23), திரு​வான்​மியூர் ரெஜினா (21) மற்​றும் ஓட்​டல் மேலா​ளர் சைதாப்​பேட்டை சுகு​மார் (43) ஆகிய 18 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

அவர்களை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய போது அதிர்ச்சிகரமான பல தகவல்கள் வெளியானது. பிடிபட்ட போதை கும்பல், வாட்ஸ் அப் குழு மூலம் மாதம் இருமுறை போதை விருந்தில் பங்கேற்றது தெரிய வந்தது. போலீஸார் கைது செய்த மூன்று பெண்களில் ஒருவர், 2010-ம் ஆண்டு வெளியான  திகிலான  தமிழ் திரைப்படத்தின் இசையமைப்பாளர் மகள் என்பது தெரிய வந்தது. பெங்களூரைச் சேர்ந்த அவர், சென்னையில் மகளிர் விடுதியில் தங்கி பணியாற்றியதும் தெரிய வந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனைத் தொடர்ந்து 18 பேரையும் நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டது. நைட் பார்ட்டியில் இசையமைப்பாளர் மகள் பிடிபட்ட சம்பவம், தமிழ் திரையுலகினர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *