அப்பல்லோ ஐசியூவில் டாக்டர் ராமதாஸ்… அன்புமணி பரபரப்பு பேட்டி

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்க்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பயப்படும்படி எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இதய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள ராமதாஸ்க்கு இதய சிகிச்சை நிபுணர்கள் இன்று காலை ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொண்டனர். இதனையொட்டி பாமக நிறுவனர் ராமதாஸை இன்று காலை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரிக்க அன்புமணி மருத்துவமனைக்கு வந்தார்.

இதன் பிறகு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த அவர். ” ராமதாஸ்க்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டுள்ளது. அவர் 6 மணி நேரம் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். அவரைப் பரிசோதித்த பிறகு பயப்படும்படி எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்.. தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதால் அவரை சந்திக்க முடியவில்லை. மேலும் ஆஞ்சியோ செய்யப்பட்டிருப்பதால், தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதால் 6 மணி நேரத்திற்குப பிறகு வெளியே அழைத்து வரப்படுவார். 2 நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் கூறியுள்ளனர்” என்று அன்புமணி தெரிவித்தார்.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *