இத கொஞ்சம் படிச்சு பாருங்க..! எளிமையான சமையல் குறிப்புகள்…!

என்னங்க..! என்ன? சமையல் பண்ணாலும் சரியாவே வர மாட்டேங்குதுனு வருத்தப்படுறீங்களா..! ருசியா டேஸ்ட்டா சமைக்கிறதுக்கு எல்லாம் ரெடி பண்ணி வச்சா.. அந்த சமையல் பொருட்கள் வீணாக போகுதுனு வருத்தப்படுறீங்களா..!

இந்த டிப்ஸ்-களை பாலோ பண்ணுங்க.. லேடீஸ்…

  • கோதுமை மாவு அரைக்கும்போது அதனுடன் சோயா பீன்ஸை சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் ஊட்டம் கூடுவதுடன் ருசியாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
  • பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.
  • கீரையை சமைத்து இறக்கி வைத்த பின்பு உப்பு சேர்த்தால், கீரையில் உண்டாகும் சில ரசாயன மாற்றங்களைத் தவிர்க்கலாம், உடலுக்கு மிகவும் நல்லது.
  • எலுமிச்சை சாதம் செய்யும் போது, இஞ்சி, பச்சை மிளகாயை மிக்சியில் அரைத்து வதக்கி, பின் சாதம் போட்டுக் கிளறினால், ரொம்ப டேஸ்டா இருக்கும்ங்க…
  • ரசம் செய்யும் போது, புளிகரைசலுடன், பழுத்த ஒரு தக்காளியை மிக்சியில் அரைத்து சேர்த்து செய்து பாருங்கள் சுவையான ரசம் ரெடியா இருக்கும்ங்க..

“வீட்டு சமையல் குறிப்புகள்…”

  • ரவா, மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.
  • தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சி கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.
  • காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.
  • தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்
  • தேங்காயை உடைத்தவுடன் கழுவி பின் பிரிட்ஜில் வைக்கவும். அப்படி செய்தால் மேலே ஏற்படும் பிசுபிசுப்பு இருக்காது.

Related Posts

ஒவ்வொரு வீட்டிலும் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?- வெளியான அதிர்ச்சி தகவல்

வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்று வருமான வரித்துறையின் தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. உலக நாடுகளில் தங்கத்தின் மீது அதிக மோகம் கொண்டவர்களாக இந்தியர்கள் உள்ளனர். திருமணம், காதணி விழா, பிறந்த நாள் விழா என அத்தனை விழாக்களிலும்…

தீபாவளி பண்டிகையால் சென்னையில் காற்று மாசு கிடுகிடு உயர்வு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாடியதால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இந்தியாவில் தீபாவளி பண்டிகை  நேற்று (அக்.20)  உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டிலும் தீபாவளியை மக்கள் கோலாகலமாக கொண்டாடினர். புத்தாடை அணிந்து இனிப்புகள் பரிமாறி பட்டாசு வெடித்து தீபாவளி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *