தங்கம் விலை மீண்டும் உச்சம் தொட்டது…. ஒரு சவரன் ரூ.85,600

தங்கம் விலை சவரனுக்கு 480 ரூபாய் இன்று உயர்ந்துள்ளது. இதனால், ஒரு சவரன் 85,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்​வ​தேச பொருளா​தாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்​படை​யில் தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து, தங்கத்தின் விலை தொடர்ந்து வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் சவரன் 57,200 ரூபாய்க்கு விற்பனையான தங்கம் விலை கடந்த செப்டம்பர் .6-ம் தேதி 80,000 ரூபாயைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கம் விலை ஒரு லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 27-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு 750 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் 85 ஆயிரத்து 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், வாரத் தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 10,700 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 85,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 160 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Related Posts

ஒவ்வொரு வீட்டிலும் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?- வெளியான அதிர்ச்சி தகவல்

வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்று வருமான வரித்துறையின் தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. உலக நாடுகளில் தங்கத்தின் மீது அதிக மோகம் கொண்டவர்களாக இந்தியர்கள் உள்ளனர். திருமணம், காதணி விழா, பிறந்த நாள் விழா என அத்தனை விழாக்களிலும்…

தீபாவளி பண்டிகையால் சென்னையில் காற்று மாசு கிடுகிடு உயர்வு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாடியதால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இந்தியாவில் தீபாவளி பண்டிகை  நேற்று (அக்.20)  உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டிலும் தீபாவளியை மக்கள் கோலாகலமாக கொண்டாடினர். புத்தாடை அணிந்து இனிப்புகள் பரிமாறி பட்டாசு வெடித்து தீபாவளி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *