தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு சூறாவளி காற்று: 4 மாவட்டங்களில் இன்று கனமழை

கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், மியான்மர் கடலோர பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அங்கு ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகக்கூடும். மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில்  சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று இடி மின்னலுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் அக்டோபர் 1-ம் தேதி வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில், சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தெற்கு, மத்திய, வடக்கு மற்றும் அந்தமான் அருகே, வங்கக்கடலில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு, மணிக்கு 45 முதல் 55 கி.மீ, வேகத்திலும், இடையிடையே, மணிக்கு, 65 கி.மீ வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

Related Posts

சிம்புவின் ‘அரசன்’ படம் தரமான சம்பவம் – எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் கவின்

‘அரசன்’ படத்தின் கதை எனக்கு நல்லா தெரியும், சிறப்பான சம்பவமா படம் இருக்க போகுது” என்று நடிகர் கவின் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளது, “அரசன்” படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிமாறன் – சிம்பு கூட்டணி கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில்,…

ஒவ்வொரு நாளும் கிழியும் திமுக அரசின் முகமூடி…அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

கடலூரில் பாம்பு கடித்தவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் உயிரிழந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட மங்களூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்ற…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *